எஸ்டிஆரின் படத்தின் உரிமைக்கு முயலும் நிறுவனங்கள்!

Filed under: சினிமா |

“வெந்து தணிந்தது காடு” படத்தின் விநியோக உரிமைக்காக முன்னணி நிறுவனங்கள் முயன்று வருகின்றன. மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது சிம்புவின் நடிப்பில் வெளியான “மாநாடு” திரைப்படம்.

அடுத்து சிம்பு நடிக்கும் படமான “வெந்து தணிந்தது காடு” ரசிகர்கள் மத்தியில் பயங்கரமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படத்தில் சிம்பு, கௌதம், ஏ ஆர் ரஹ்மான் ஆகியோரின் வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக ஒன்று சேர்ந்துள்ளனர். சென்னை மும்பை என இரண்டு இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த நிலையில் இப்போது மொத்த படப்பிடிப்பும் முடிந்துள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள “காலத்துக்கும் நீ வேணும்“ என்கிற முதல் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது ரிலீசுக்கான வேலைகள் தொடங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் தமிழக விநியோக உரிமையைப் பெற முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.