ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர்கள்!

Filed under: தமிழகம் |

12ம் வகுப்பு தேர்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இத்தேர்வு எழுதிய இரட்டையர்கள் ஒரே மதிப்பெண் பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த நிரஞ்சன் மற்றும் நிவேதா ஆகிய இருவரும் இரட்டை குழந்தைகள். இருவரும் இவ்வாண்டு 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதினர். இருவரும் 530 என்ற ஒரே மதிப்பெண்கள் பெற்றுள்ளதால் ஆச்சரியமாக உள்ளது. இவ்வளவுக்கும் இரட்டையர்களில் நிவேதா ஆர்ட்ஸ் குரூப்பும் நிரஞ்சன் சயின்ஸ் குரூப்பும் படித்து வந்தார்கள். இருவரும் தனித்தனி பாடப்பிரிவில் உள்ள மதிப்பெண்கள் வேறாக இருந்தாலும் 530 என்று ஒரே மதிப்பெண்ணாக வந்திருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து நிவேதா அளித்த பேட்டியில், “எனக்கும் எனது உடன் பிறந்த அண்ணனுக்கும் பல வகைகளில் ஒற்றுமை உண்டு தற்போது மதிப்பெண்களிலும் ஒற்றுமை இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது” என்று கூறினார்.