ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு!

Filed under: அரசியல்,தமிழகம் |

இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையில் அதிமுகவினர் பொதுச்செயலாளருக்கான தேர்தலை அறிவித்தனர்.

அதிமுக பொதுச்செயலாளருக்கு தேர்தல் அறிவித்துள்ளது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது என்று பண்ருட்டி ராமச்சத்திரன் கூறியுள்ளார். அவர் செய்தியாளர்களிடம், “அதிமுகவின் சட்டவிதிகளைப் பின்பற்றாமல் திடீரென்று தேர்தல் அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது அதிமுகவை கொச்சைப்படுத்தும் செயலாகும். ஏற்கனவே, நீதிமன்றத்தில் புகார்கள் இருக்கும்போது, தேர்தல் நடத்தலாமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், “தற்போது, அதிமுகவை சீர்குலைக்கும் வகையில் எடப்பாடி பழனிசமி தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்” என்று குற்றம்சாட்டினார். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல், இன்று முதல் 20ம் தேதி வரை காலை 10 மணி முதல் பிற்பகல் வரை வேட்புமனுதாக்கல் நடைபெறவுள்ளது. இந்த வேட்மனுவை மார்ச் 21ம் தேதி பிற்பலம் 3 மணிக்கும் திரும்பப் பெறலாம், மார்ச் 26ம் தேதி பொதுச்செயலாளர் தேர்ததல் நடைபெறும் நிலையில், மார்ச் 27ம் தேதி ஓட்டுகள் எண்ணப்படும்.