கட்டிலுக்கு நோ!

Filed under: உலகம் |

பிரிட்டன் சுகாதாரத்துறை குரங்கு அம்மை நோய் குறித்து புதிய வழி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தற்போது புதிதாக தோன்றியுள்ள குரங்கு அம்மை அச்சுறுத்தலை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த குரங்கு அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. பெரிய அம்மை தடுப்பூசியை குரங்கு அம்மை பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு செலுத்துவதற்காக இங்கிலாந்து சுகாதாரத்துறை தயாராகி வருவகிறது. இதை தொடர்ந்து பிரிட்டன் சுகாதாரத்துறை புதிய வழிகாட்டும் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களும், பாதிப்பு அறிகுறி கொண்டவர்களும் தாம்பத்யம் கொள்வதை தவிர்க்கும்படி அறிவுறுத்துகிறது. குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் புண்கள் அனைத்தும் குணமாகும் வரையிலும், உடலில் ஏற்பட்ட சிரங்குகள் காயும் வரையிலும் மற்றவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.