கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான சங்கரய்யா காலமானார்!

Filed under: அரசியல்,தமிழகம் |

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான சங்கரய்யா காலமானார், அவருக்கு வயது 102.

உடல்நலக்குறைவு காரணமாக சங்கரய்யா கடந்த சில நாட்களாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று உடல் நலம் விசாரித்தனர். அவர் சிகிச்சை பலனின்றி சங்கரய்யா காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியை தொடங்கியவர்களில் ஒருவரும் விடுதலை போட்ட வீரருமான போராட்ட வீரருமான சங்கரய்யா பல்வேறு புகழுக்கு சொந்தக்காரர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் மக்கள் பணியாற்றி உள்ளார். பொதுமக்கள் அஞ்சலிக்காக குரோம்பேட்டையில் உள்ள சங்கரய்யா இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளதாகவும் பின்னர் தி.நகரிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.