மூன்று வேலையும் இலவச உணவு முதல்வர் அதிரடி அறிவிப்பு!!!

Filed under: தமிழகம் |

சென்னையில் பொதுமக்களுக்கு நாளை முதல் 3 வேளையும் இலவச உணவு வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி முக்கிய செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், புரெவி புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.

இதேபோல, சென்னையில் மழையால் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி உள்ள குடிசை வாழ் மக்களுக்கு உணவு வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, சென்னை குடிசைவாழ் பகுதி மக்களுக்கு வரும் 13-ம் தேதி வரை இலவச உணவு வழங்கப்பட உள்ளது. சமுதாய நலக்கூடங்கள், அம்மா உணவகங்கள் மூலம் மக்களுக்கு உணவு வழங்கப்படும். இதன் மூலம் குடிசைப் பகுதிகளில் 5.3 லட்சம் குடும்பங்கள் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கொரோனா பரவல் கடுமையாக இருந்தபோது, ஏழை எளிய மக்களுக்கு அம்மா உணவகம் மூலம் உணவு வழங்க முதல்வர் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.