கள்ளக்குறிச்சி வழக்கில் ஹைகோர்ட் அதிரடி!

Filed under: தமிழகம் |

சென்னை உயர்நீதிமன்றம் கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் வழக்கில் விசாரணை நல்ல முறையில் நடைபெற்று வருவதாக விசாரணை அமைப்புகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில், நியாயமான முறையில் விசாரணை நடத்தவும், கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை நியமிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கல்வி காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க 800 நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் இது குறித்து அரசுக்கு பாராட்டு தெரிவித்திருந்தது. இந்நிலையில் இவ்வழக்கில் நீதிபதி இந்த விவகாரம் தொடர்பாக ஊடக விசாரணை நடத்தக்கூடாது என உத்தரவிட்ட பிறகும் சில மின்னனு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இந்த விவகாரம் குறித்து நிபுணத்துவம் இல்லாத நபர்களிடம் நேர்காணல் எடுத்து ஒளிபரப்பப்படுவதாக கூறியுள்ளார். மேலும், ஜிப்மர் குழு அறிக்கையை தாக்கல் செய்த பின்னும் நிபுணத்துவம் இல்லாத வழக்கறிஞர்கள் ஓரிருவர் இரண்டு பிரத பரிசோதனை அறிக்கைகளையும் ஒப்பிட்டு மாறுபட்ட கருத்துகளை ஊடகங்களுக்கு கூறிவருகின்றனர். வழக்கறிஞராக இருந்து இதுபோல் தனியாக விசாரணை நடத்துவது தொழிலுக்கு ஏற்றது அல்ல என்றார் நீதிபதி. மாணவி விவகாரம் குறித்து ஊடகங்களில் பேசிய வழக்கறிஞர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீதிபதி பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றாத வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தயங்காது என்றும் எச்சரித்துள்ளார்.