காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதி!

Filed under: அரசியல்,இந்தியா |

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதியாக ஒவ்வொரு மாதமும் 10 கிலோ இலவச அரிசி வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளது.

அடுத்த ஆண்டு சட்டமன்ற பொது தேர்தல் கர்நாடக மாநிலத்தில் நடைபெற இருக்கிறது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாரதிய ஜனதா கட்சியும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இம்முறை காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்து ஆக வேண்டும் என்று தீவிர முயற்சி செய்து வருகிறது. அதற்காக இப்பொழுது முதலே பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் மீண்டும் ஆட்சி அமைத்தால் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு அன்ன பாக்யா என்ற திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதையடுத்து பாரதிய ஜனதா கட்சி பதிலடியாக என்ன அறிவிப்பு வெளியிடப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.