குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட தகராறில் 6 பேர் சுட்டுக்கொலை!

Filed under: இந்தியா |

குப்பை கொட்டுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மத்திய பிரதேசத்தில் மொரீனா மாவட்டம் லேபா கிராமத்தில் 6 பேர் துப்பாக்கியால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் மொரீனா மாவட்டம், லேபா கிராமத்தைச் சேர்ந்த கஜேந்திர சிங் மற்றும் தீர் சிங் ஆகிய இரு குடும்பத்தினரிடையே கடந்த 2013ம் ஆண்டு முதல் குப்பை கொட்டுவது தொடர்பாக தகராறு இருந்து வருகிறது. இரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே இன்று காலையில் தகரராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த கஜேந்திர சிங்கின் வீட்டை, தீர் சிங் ஆயுதங்களால் தாக்கினார். இதில், கஜேந்திர சிங் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட ஆறு பேரை தீர் சிங் குடும்பத்தினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். மேலும், இருவர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தால் அக்கிராமத்தில் பெரும் பதற்றம் நிலவுவதால், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கியால் சுட்ட இளைஞர்கள் தப்பியோடப்பட்ட நிலையில், அவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது.