சரத்பாபுவிற்கு நோய் குறித்து வெளியான தகவல்தகவல்!

Filed under: சினிமா |

நேற்று ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் நடிகர் சரத்பாபு உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து கமல்ஹாசன் ரஜினிகாந்த் உள்பட பல திரை உலக பிரபலங்கள் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர்.

இன்று சென்னையிலுள்ள சரத்பாபு வீட்டிற்கு அவரது உடல் எடுத்து செல்லப்பட்டு சென்னை மக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்தனர். கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்றுக் கொண்ட சரத் பாபு 92 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் மல்டிபிள் மைலோமா என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 22 மே மதியம் 1:30 மணியளவில் காலமாகியுள்ளார். இத்தகவலை நடிகை சுஹாசினி இரங்கல் தெரிவித்தபோது கூறியுள்ளார்.