சித்ரா ராமகிருஷ்ணா கைது

Filed under: இந்தியா |

அமலாக்கத்துறை பங்குச்சந்தை முறைகேடு வழக்கு சம்பந்தமாக சித்ரா ராமகிருஷ்ணாவை கைது செய்துள்ளது. கடந்த மார்ச் மாதம் சிபிஐ போலீசார் தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணனை கைது செய்தது. அவர் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பங்குச்சந்தை வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் கோலோகெஷன் என்ற வசதி 2010ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வசதியை முறைகேடாக பயன்படுத்தி சில சந்தை புரோக்கர் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டதாக சித்ரா ராமகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இநிலையில் கடந்த மார்ச் மாதம் சிபிஐ சித்ரா ராமகிருஷ்ணனை கைது செய்த நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களிடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை செய்து வருகிறது. அமலாக்கத் துறையும் தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணனை கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.