மகராஷ்டிராவில் புதிதாக 279 காவலர்கள் கொரோனா தொற்றால் பாதிப்பு – மொத்த எண்ணிக்கை இவ்ளோவா!

Filed under: இந்தியா |

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 19 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இந்த வைரஸால் மகாராஷ்டிரா மாநிலம் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து தமிழ்நாடு, டெல்லி, குஜராத் ஆகிய மாநிலங்கள் உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தடுப்பு வேலைகளில் ஈடுபடும் காவல்துறையினர் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இதுவரை 5,454 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 4,071 பேர் குணமடைந்துள்ளனர், 1,078 பேருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது மற்றும் 70 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 274 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர்.