சிலிண்டர் விலை உயர்வு!

Filed under: தமிழகம் |

மாதம் முதல் தேதியானால் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில் நவம்பர் ஒன்றாம் தேதியான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.101 உயர்த்தப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்துள்ளன. இன்றைய விலை உயர்வுக்கு பின், ஒரு சிலிண்டர் ரூ.1999.50க்கு விற்பனையாகிறது. கடந்த அக்டோபர் 1ம் தேதியன்று ஏற்கனவே ரூ.203 உயர்த்தியது. இன்று மீண்டும் ரூ.101.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் ரூ.918.50 என்ற விலையில் தொடர்ந்து விற்பனையாகிறது. இருப்பினும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் டீக்கடை மற்றும் ஹோட்டல்களில் விலை ஏற்றம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை கடந்த இரண்டு மாதத்தில் 300 ரூபாய்க்கும் மேல் அதிகரித்துள்ளதால் வணிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.