சூர்யா 42 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

Filed under: சினிமா |

நடிகர் சூர்யாவின் 42வது திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சமீபத்தில் இத்திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கோவாவில் முடிவடைந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் கே.எஸ்.ரவிக்குமார் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் நாயகியின் தந்தையாக நடிப்பார் என்று கூறப்படுகிறது. இப்போது ஷூட்டிங் நடப்பதில் எதிர்பார்ப்பை விட கூடுதலாக இரண்டு மாதங்கள் தாமதமாகும் என்று சொல்லப்படுகிறது. இதனால் சூர்யா அடுத்து நடிக்கவுள்ள ஞானவேல் இயக்கும் படம் தொடங்குவது மேலும் தாமதமாகும் என கூறப்படுகிறது.