ஜிவி பிரகாஷ் -சைந்தவி குறித்து சீனுராமசாமி

Filed under: சினிமா |

நேற்று திடீரென ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகிய இருவரும் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது திரையுலகினர்கள் மட்டுமில்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததாக கூறப்பட்டாலும் ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக இருக்கும் வரை இருவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவர் நடிக்க தொடங்கியவுடன் தான் கருத்து வேறுபாடு அதிகரித்ததாகவும் குறிப்பாக நடிகைகளுடன் நெருக்கமாக நடிப்பதை சைந்தவி விரும்பவில்லை என்றும் இவர்களது பிரிவுக்கு இது தான் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவியை சேர்த்து வைக்க அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இருவரும் பிரிவதில் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜிவி பிரகாஷ் சைந்தவி பிரிவு குறித்து இயக்குனர் சீனு ராமசாமி தனது சமூக வலைத்தளத்தில், “பிரிவு விடுதலை இணைவு சிறை வாழ்வில் எனில் பொறுமை நல்ல முடிவுக்கு தெளிவு வானம் இருக்கிறது திசைகள் இருக்கிறது திரும்பவும் இணையும் ஒரு சந்தர்பத்திற்கு நினைவை தந்து பறக்கலாம் அவரவர் திசையில் இசையும் குரலும் இணைக்கும் வரிகளாக காலம் இருக்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.