டாடாவின் புதிய ஐபோன் தொழிற்சாலை!

Filed under: இந்தியா |

டாடா குழுமம் பெங்களூரு அருகே உள்ள ஐபோன் தயாரிக்கும் தொழிற்சாலையை வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

டாடா நிறுவனம் கடந்து சில மாதங்களாக பல்வேறு துறைகளில் முதலீடு செய்து வருகிறது. அவ்வகையில் பெங்களூரு அருகே தைவான் நாட்டிற்கு சொந்தமான ஐபோன் தயாரிப்பு நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. அந்த ஆலையை வாங்குவதற்கான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் இந்திய மதிப்பில் சுமார் 4950 கோடிக்கு டாடா வாங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மார்ச் 31ம் தேதி இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடப்பதாகவும் ஏப்ரல் முதல் இந்நிறுவனம் டாடாவின் கைக்கு வந்து விடும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தில் பத்தாயிரம் ஊழியர்கள் தற்போது பணி செய்து வரும் நிலையில் டாடா நிறுவனம் வாங்கி விட்டால் அந்த ஊழியர்கள் அனைவரும் தொடர்ந்து பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையை டாடா நிறுவனம் வாங்கி விட்டால் இந்தியாவில் அதிக ஐ போன் தயாரிக்கும் நிறுவனமாக டாடா குழுமம் இருக்கும்.