டாஸ் வென்ற ஆஸ்திரேலியாவின் அதிரடி முடிவு!

Filed under: விளையாட்டு |

கடந்த சில நாட்களாக உலகக் கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று முதல் அரை இறுதி போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற உள்ளது.

இன்றைய அரையிறுதி போட்டியின் டாஸ் சற்று முன் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி அதிரடியாக பேட்டிங் செய்ய முடிவு எடுத்துள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலியா மகளிர் அணி வீராங்கனைகள் இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்க உள்ளனர். இன்றைய போட்டியில் வெல்லும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் இரு அணிகளும் தீவிரமாக விளையாடும் என்பதும் வெற்றிக்காக தீவிரம் முயற்சி செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது. நாளை இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது அரையிறுதி போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் வெல்லும் அணி இன்று வென்ற அணியுடன் இறுதி போட்டியில் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது. மகளிர் உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி வரும் ஞாயிறன்று மாலை 6:30 மணிக்கு கேப்டவுன் நகரில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி இன்று அரையறுதியில் ஆஸ்திரேலியாவை வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா என்பதை விளையாட்டின் போதுதான் தெரியும்.