டிரெயிலர் ரிலீஸ் விழாவில் பார்த்திபனின் பேச்சு!

Filed under: சினிமா |

இயக்குனர் மணிரத்தினத்திற்கு மனைவி சுஹாசினிக்கு முன்பே வேறு காதல் இருந்திருக்கிறது என நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் டிரெயிலர் ரிலீஸ் விழாவில் பேசியுள்ளார்.

இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமான “பொன்னியின் செல்வன்.” கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையப்படுத்தி இரண்டு பாக திரைப்படமாக “பொன்னியின் செல்வன்” உருவாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஜெய்ராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா போன்ற நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் இம்மாதம் 30ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் நேற்று இசை மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர் பார்த்திபன், “போன வாரம் பார்த்த படம் பழகிவிட்டது, போன மாதம் கேட்ட கதை பழையதாகி விட்டது. ஆனால், பல ஆண்டுகளாக நடந்த கதை கல்கியின் எழுத்தால் சரித்திரமாக மாறிவிட்ட இந்த படைப்பு, அவருடைய கனவை இன்று கலக்கி இருக்கிறார் மணி ரத்னம் அவர்கள். நான் பேசும்போது நீங்கள் கை தட்டி பாராட்டுவது போல் இன்று கல்கி இருந்திருந்தால் மணிரத்தினம் அவர்களை கைதட்டி பாராட்டியிருந்திருப்பார். மணிரத்னத்திற்கு சுஹாசினிக்கு முன்பு ஒரு காதல் இருந்திருக்கிறது. அது பொன்னியின் செல்வன் என்று நினைக்கிறேன். அப்படி காதல் இல்லை என்றால் இப்படத்தை நிச்சயம் அவர் செய்திருக்க முடியாது. பொன்னியின் செல்வனில் கடைசி புள்ளி எழுத்து நான்தான். நடிக்கவே வராதவர்களுக்கு கூட மணி சார் இருந்தால் நடிக்க வந்து விடும். இப்படத்தின் வாய்ப்பு கிடைத்ததும், “ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் நாம் தூய தமிழில் பேசினோம். ஆகையால், நமக்கு தமிழ் நன்றாக பேச வரும் என்று இறுமாப்புடன் சென்றேன். ஆனால், அங்கு சென்றதும் ஒரு மாப்பு கூட வேலை செய்யவில்லை” என்று பேசினார்.