தமிழகத்திற்கு இது சாபக்கேடு; திருமாவளவன்!

Filed under: அரசியல்,தமிழகம் |

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர்கள் அரசியல் வரும் சாபக்கேடு தமிழகத்தில் மட்டும்தான் என்று கூறியுள்ளார்.

எந்த மாநிலத்திலும் தமிழகத்தை போல நடிகர்கள் அரசியலுக்கு வருவதில்லை. தமிழகத்தை பொறுத்தவரை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ரஜினிகாந்த், கமலஹாசன், சரத்குமார், விஜயகாந்த், டி ராஜேந்தர், பாக்யராஜ் உள்ளிட்ட பலர் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர திட்டமிட்டனர். ரஜினி மட்டும் திடீரென கடைசி நேரத்தில் பின்வாங்கி விட்டார். இன்னும் விஜய், விஷால் உள்ளிட்ட பல நடிகர்கள் அரசியல் ஆசையுடன் உலா வருகின்றனர். இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் எம் திருமாவளவன், “நடிகர்கள் அரசியலுக்கு வரும் சாபக்கேடு தமிழ்நாட்டில் மட்டும் தான் உள்ளது. சினிமாவில் கிடைத்த புகழ் இருந்தால் போதும் முதலமைச்சர் ஆகிவிடலாம் என நடிகர்கள் நினைக்கின்றனர். மக்களுக்கு தொண்டு செய்ய, கருத்தியல் சார்ந்து களப்பணி ஆற்ற அரசியலுக்கு வந்தால் வரவேற்போம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.