தமிழ்நாடு அரசின் உதவித்தொகை அறிவிப்பு!

Filed under: அரசியல்,தமிழகம் |

ஆண்டுக்கு 7200 ரூபாய் வேலையில்லாத இளைஞர்களுக்கு வழங்க இருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் 200 ரூபாய் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300 அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று வேலை இல்லாதவர்களுக்கு 400 ரூபாயும் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கு மாதம் ரூபாய் 600 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் குடும்ப வருமானம் 72 ஆயிரத்து மேல் இருக்கக்கூடாது. அதேபோல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆதி திராவிட பழங்குடியின விண்ணப்பதாரர்கள் மற்றும் 45 வயது வரை இருக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.