தலைநகரில் கொரோனா உயர்வு!

Filed under: இந்தியா |

தலைநகர் டில்லியில் கொரோனா பாதிப்புகள் தினசரி உயர்ந்து கொண்டே வருகிறது.

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்திலும் கடந்த 2020ம் ஆண்டு கொரொனா தொற்றுப் பரவியது. இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், முதல் 2 அலைகள் முடிந்து, தற்போது 3 வது அலை நம்மை பாடாய் படுத்தி வருகிறது.

மருத்துவ வல்லுனர்கள் விரைவில் கொரொனா 4வது அலைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர். இந்நிலையில், சமீப காலமாக நாட்டில் கொரொனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தலைநகர் டில்லியில் கொரானாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு தற்போது தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் 2,073 பேர் பாதிகப்பட்டுள்ளனர். டில்லியில் கொரோனவால் பாதிக்கப்பட்டுவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4 கோடியே 40 லட்சத்து 87 ஆயிரத்து 37 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து சுமார் 4,34,24,029 பேர் குணமடைந்துள்ளனர். டில்லியில் கொரொனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆகும். இதுவரை 5,26,530 பேர் உயிரிழந்துள்ளனர்.