திருமணமாகாத சிறுமி பிரசவத்திற்குப் பின் உயிரிழப்பு!

Filed under: Uncategory |

திருமணம் ஆகாத சிறுமி பிரசவத்திற்கு பின் உயிரிழந்ததால் மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த 17வயது சிறுமி திருமணமாகாத நிலையில், கர்ப்பமானதால் பெற்றோர் அதிர்ச்சசியடைந்துள்ளனர். அவரை அங்கேயுள்ள தனியார் மருத்துவமனையில் 7 மாத கர்ப்பிணி மகளை அனுமதித்தனர். கடந்த 7ம் தேதி சிறுமிக்கு அறுவைச் சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன்பின்னர், சிறுமியின் உடல் நிலை மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே சிறுமி உயிரிழந்தார். மேலும், பிறந்த குழந்தையும் இறந்துவிட்டதாக தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் கூறினர். இதுகுறித்து, போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது, அவர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்த்தபோது, குழந்தையின் உடலில் அசைவுகள் இருந்தது. உடனே குழந்தையை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமிக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் செல்லம்மாள் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.