தி.மு.க. விமர்சனம் செய்த பிரதமர் மோடி!

Filed under: அரசியல்,தமிழகம் |

பிரதமர் மோடி “வரும் மக்களவை தேர்தலில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெல்ல வேண்டும்” என்று பேசினார்.

ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 18வது மக்களவை தேர்தல் வரும் 7 கட்டங்களாக நடைபெறுவதாகவும், பதிவான வாக்குகள் வரும் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார். எனவே நாடு முழுவதும் கடந்த சனிக்கிழமை முதல் தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டது. பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரம் மற்றும் வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன.நாடாளுமன்ற தேர்தலையொட்டி, நாடு முழுவதும் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று கோவையில் பிரதமர் மோடி வாகன பேரணியில் பங்கேற்றார். இன்று 2 வது நாளாக பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார். கேரளாவிலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக சேலம் விமான நிலையம் வந்தடைந்த மோடி, அங்கிருந்து கார் மூலமாக பொதுக்க்கூட்டம் நடைபெறும் கெஜ்ஜல் நாய்க்கன் பட்டிக்கு வந்தார். இந்நிகழ்ச்சியில் மேடையில் பேசிய பிரதமர் மோடி, “எனக்கு கிடைத்த ஆதரவால் திமுகவிற்கு தூக்கம் தொலைந்து விட்டது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெல்ல வேண்டும். கட்சிக்காக நேர்ன்மையாக உழைத்தவர்களை படுகொலை செய்து விட்டார்கள். ஆடிட்டர் ரமேஷ் உள்பட பாஜக நிர்வாகிகள் கொல்லப்பட்டதை மறக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார். பாஜக பொதுக்க்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ், ஓ.பன்னீர் செல்வம், டிடிவி. தினகரன், ஜி.கே.வாசன். ஏ.சி.சண்முகம், தமிழருவி மணியன் உள்ளிட்ட கூட்டணி கட்சியின் கலந்து கொண்டனர்.