தொழில்நுட்ப கோளாறால் 200 விமானங்கள் ரத்து!

Filed under: உலகம் |

திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இங்கிலாந்து நாட்டில் 200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் பெறும் அவதியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

திடீரென இங்கிலாந்து நாட்டில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக சரியாக சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் பல விமானங்கள் ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டதாகவும் இங்கிலாந்தில் இருந்து கிளம்ப வேண்டிய மற்றும் வந்து சேர வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 200க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பல மணி நேரம் போராடி தொழில்நுட்பக் குழுவினர் கோளாறை சரி செய்தனர். இதையடுத்து விமானங்களின் கால அட்டவணை மாற்றப்பட்டு தற்போது விமானங்கள் மீண்டும் சீராக ஓட தொடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் பல மணி நேரங்கள் பயணிகள் பெரும் அவதிப்பட்டதாகவும் கூறப்படுகிறது.