நடிகர் நவாசுதீன் சித்திக் முன்னாள் மனைவி மீது புகார்!

Filed under: சினிமா |

நடிகர் நவாசுதீன் முன்னாள் மனைவி அலியா தன் மீது வழக்குகளை போட்டிருப்பதாக புகார் கூறியுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “பேட்ட” திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் நவசுதீன் சித்திக். நவாசுதீன் சித்திக் தன்னைக் கொடுமைப்படுத்துவதாக, குழந்தைகளுடன் வீட்டிலிருந்து வெளியேறிய அவரது முன்னாள் மனைவி அலியா போலீசில் புகாரளித்தார். இதுகுறித்து நவாசுதீன் சித்திக் கூறியதாவது, “நான் அமைதியாக இருப்பதால் என்னை எல்லோரும் கெட்டவாகப் பார்க்கிறார்கள். அலியாவும், நானும் விவாகரத்து செய்துவிட்டோம். குழந்தைகளைப் பணத்திற்காக வேண்டி, அவர் துபாயில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளார். தற்போது அலியாவுக்கு நான் மாதம் தோறும் ரூ.10 லட்சம் பணம் கொடுத்து வருகிறேன். துபாய் செல்லும்போது, முன்பு மாதம் ரூ.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை கொடுத்து வந்தேன். அதுதவிர துபாயில் அவர் தங்கியுள்ள வாடகை வீட்டிற்கும் நான் வாடகை கொடுத்து வருகிறேன். அவருக்குப் பணம் வேண்டுமென்பதற்காக என் குழந்தைகளைப் பிணைக்கைதிகளாக வைத்துக்கொண்டு என்னிடம் வழக்குகள் போட்டிருக்கிறார். அலியாவுக்குப் பணம்தான் முக்கியம்.நான் சட்டத்தை நம்புகிறேன் அனைத்து வழக்குகளில் வெல்லுவேன்” என்று தெரிவித்துள்ளார்.