நடிகை ராஷி கண்ணா கருத்து!

Filed under: சினிமா |

தமிழில் பிஸியான நடிகைகளுள் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ராஷிகண்ணா. இவர் “இமைக்கா நொடிகள்” திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர்.

ஜெயம் ரவியுடன் “அடங்கமறு” படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியாகி ஹிட்டான “சர்தார்” படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது விஜய் சேதுபதி மற்றும் ஷாகித் கபூர் ஆகியோருடன் இணைந்து பார்ஸி வெப் சீரிஸில் நடித்திருந்தார். சமூகவலைதளங்களில் தீவிரமாக இயங்கும் ராஷிகண்ணா தனது கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். அவ்வகையில் இப்போது ஸ்டைலிஷான உடை அணிந்து புகைப்படங்களை வெளியிடுகிறார். இது வெகவாக ரசிகர்களை கவர்ந்துள்ளன. மேலும் அவர் கூறும் போது, “பார்சி” தொடர் மூலமாக இந்தியா முழுதும் நான் அறியபட்டுள்ளேன். அதனால் இனிமேல் தன்னை இந்திய நடிகை என சொல்லிக்கொள்ளலாம். இந்த தொடரை நான் ராஜ் & டிகே பெயரைக் கேட்ட உடனேயே ஒத்துக்கொண்டேன். சினிமாவுக்கும் ஓடிடி தொடர்களுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. ஆனால் திரையரங்கில் நம்மை நாமே பார்ப்பது போல ஓடிடியில் ஒரு அனுபவம் கிடைக்காது. அதனால் நான் திரையரங்க ரிலீஸ் படங்களுக்குதான் முன்னுரிமை கொடுப்பேன்” என்று கூறியுள்ளார். இந்தி சினிமாவில் தன் பயணத்தை ஆரம்பித்த ராஷி கண்ணா, இப்போது அங்கு மிகப்பெரிய ஹிட்டைக் கொடுத்துள்ளார்.