பரீட்சை பேப்பரை ஜூன் 1 முதல் திருத்த துவங்கலாம்!

Filed under: தமிழகம் |

விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 1ம் தேதி முதல் தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பொதுத்தேர்வு எழுதிய 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீடு செய்ய பணி மூப்பு அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாளை திருத்துவது உள்ளிட்ட அலுவல் சார்ந்த பணிகளை கவனிக்க ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டுமென பள்ளிக்கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.

11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்ய பணி மூப்பு அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் திருத்தம், பெயர் விடுபட்டிருந்தால் தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்கலாம் என சென்னை முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளனர். 12 மாணவர்களுக்கு இன்னும் 3 தேர்வுகள் மட்டுமே நடைபெற வேண்டும், இதேபோல 10ம் வகுப்பு மாணவர்கள் இன்னும் 4 தேர்வுகள் எழுத வேண்டும். இந்த மாதம் 31ம் தேதியுடன் தேர்வுகள் முழுமையாக முடிந்து விடுகின்றன.
இதனிடையே நடந்த தேர்வு விடைத்தாள்கள் இடமாற்றம் செய்யும் பணி தொடங்கியுள்ள நிலையில் தேர்வு முடிந்தவுடன் ஜூன் 1ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. எத்தனை மையங்களில் விடைத்தாள் திருத்தப்படும், எத்தனை ஆசிரியர்கள் இதில் ஈடுபடுகிறார்கள் என்ற விவரம் விரைவில் தெரிவிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.