10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு- இந்த மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி!

Filed under: அரசியல்,தமிழகம் |

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு- இந்த மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி!

ஜூன் 15 ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஆரம்பிக்கப்பட இருக்கும் நிலையில் அது சம்மந்தமான வழிகாட்டல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனாவை முன்னிட்டு தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் தேர்வுகளை ரத்து செய்துவிட்டு மாணவர்கள் அனைவரும் பாஸ் என்று அறிவிக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஆனால் தமிழக அரசு அதை ஏற்க மறுத்து ஜூன் 15 ஆம் தேதி முதல் தேர்வுகள் நடத்தப்பட இருக்கின்றன.

இதையடுத்து தேர்வு மையங்களுக்குள் மாணவ, மாணவிகள் அனுமதிப்பது தொடர்பாக வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் ‘பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்களுக்குக் காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். அவ்வாறு அனுப்பப்படும் மாணவர்கள் துணைத் தேர்வில் தேர்வுகளை எழுதிக் கொள்ளலாம். 37 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை இருந்தால் மட்டுமே மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். காய்ச்சல் இருந்தாலும் மாணவர்கள் விரும்பினால் தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். மாணவர்களுக்குக் காலையிலும் மாலையிலும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட வேண்டும். மாணவர்களின் உடல்நிலை குறித்த விவரங்களைப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். சிறப்புப் பேருந்தில் 60 சதவிகித மாணவர்கள் மட்டும் ஏற அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.’ எனக் கூறப்பட்டுள்ளது.