பாட்னா நிகழ்ச்சி குறித்து அமித்ஷா கிண்டல்!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாட்னாவில் தற்போது புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கிண்டலடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் கூட்டத்தில் பேசியபோது, “2024ம் தேதி மக்களவைத் தேர்தலில் 300 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறும். மீண்டும் இந்தியாவின் பிரதமர் மோடி தான் என்பதை உறுதியாக சொல்லுகிறேன். தற்போது பாட்னாவில் புகைப்படம் எடுக்கும் போட்டோஷூட் நிகழ்ச்சிதான் நடைபெற்று வருகிறது. அது எதிர்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் அல்ல, எதிர்க்கட்சிகளால் கூட மோடி அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூற முடியாது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் இந்தியாவில் ஊடுருவி நமது ராணுவர்களை கொன்றனர். ஆனால் தற்போது அந்த நிலை முற்றிலும் மாறி உள்ளது” என்று கூறியுள்ளார்.