பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் காலமானார்!

Filed under: சினிமா |

மூத்த பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் இன்று காலமானார்.

வாணி ஜெயராம் வேலூரில் ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தவர். கடந்த 1971ம் ஆண்டு “குட்டி” என்ற இந்திப்படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார். தொடர்ந்து, ஐம்பது ஆண்டுகளாக பாடகியாக இருந்தவர். இவர் 19 மொழிகளில் சினிமா, தனிப்பாடல்கள், பக்தி பாடல்கள் என பல்லாயிரம் பாடல்கள் பாடியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வாந்த வாணி ஜெயராம் (78) இன்று அவரது இல்லத்தின் நெற்றியில் காயங்களுடன் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இவர், “மல்லிகை என் மன்னன் மயக்கம்,” “நித்தம் நித்தம் நெல்லுச் சோறு” போன்ற சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். புகழ்பெற்ற பின்னணி பாடகி வாணி ஜெயராமின் மறைவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.