முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவிரியில் இருந்து உரிய நீரை திறந்திட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடிததத்தில், “காவிரி டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை நெற்பயிரை காப்பாற்ற தண்ணீர் தேவை, குறுவை நெற்பயிரையும், டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பிரதமர் காப்பாற்ற வேண்டும். ஜூன், ஜூலை மாதங்களில் ஏற்பட்ட காவிரி நீர் பற்றாக்குறையை தீர்க்க கர்நாடகா அரசுக்கு பிரதமர் அறிவுரை வழங்க வேண்டும், 80% நிரம்பிய சூழலிலும் கர்நாடகாவின் முக்கிய அணைகளிலிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை” என்று முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
முதலாமாண்டு கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் எப்போது?
நத்தம் சேர்வீடு கிராமத்தில் பெண்ணை கட்டிப் போட்டு ரசாயன பொடியை தூவி நகை திருடியவர் கைது.
பாரத் மாதா கி ஜே' கோஷத்தை அஜிமுல்லாகான் என்ற இஸ்லாமியர் உருவாக்கினார்,
இந்திய மக்கள் அனைவருக்கும் எனது சுதந்திரதின நல்வாழ்த்துகள் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!



