பிரான்ஸில் திருவள்ளுவருக்கு சிலை-; பிரதமர் மோடி அறிவிப்பு!

Filed under: அரசியல்,இந்தியா,உலகம் |

“பிரான்சில் திருவள்ளுவர் சிலை அமைப்பது இந்தியாவுக்குக் கிடைத்த பெருமையாகும்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டிற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார் பிரதமர் மோடி. பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான Grand Cross of Legion of Honor என்ற விருதை பிரான்ஸ் நாட்டின் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான், பிரதமர் மோடிக்கு வழங்கி சிறப்பித்தார். இந்த கௌரவ விருதை பெரும் முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பிரதமர் மற்றும் பிரான்ஸ் பிரதமர் ஆகிய இருவரும் இருநாட்டு நல்லுறவு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது. நேற்றிரவு இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, “21ம் ஆண்டு நூற்றாண்டில் இந்தியாவும், பிரான்சும் பல சவால்களை சந்தித்து வருகின்றன. உலகின் தொன்மையான மொழி தமிழ். அத்தகைய சிறப்புடைய தமிழ் மொழி, இந்தியாவின் மொழிகளில் ஒன்று. பிரான்ஸ் நாட்டில் இந்தியாவின் சார்பில் திருவள்ளுவர் சிலை ஒன்று அமைக்கப்படும். பிரான்சில் திருவள்ளுவர் சிலை அமைப்பது இந்தியாவுக்குக் கிடைத்த பெருமையாகும்” என்று கூறியுள்ளார். பிரதமர் மோடி அறிவித்துள்ள பிரான்ஸிக்கு வழங்கப்படவுள்ள சிலையை புதுச்சேரியைச் சேர்ந்த சிற்ப கலைஞர் முனுசாமி வடிவமைத்துள்ளார். இச்சிலை 7 அடி உயரத்தில், 600 கிலோ எடையில் உருவாகியுள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பே இச்சிலை பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இச்சிலை பிரான்ஸ் நாட்டிலுள்ள தமிழ்க் கலாசார மன்றம் பிரான்ஸ் அரசின் அனுமதியுடன் செர்ஜி மைய பூங்காவில் நிறுவப்படவுள்ளது. இன்று பிரதமர் இதைப் பார்வையிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.