பிரான்ஸில் வன்முறை; 200 போலீசார் காயம், 1000 பேர் கைது!

Filed under: உலகம் |

இன்று 4வது நாளாக பிரான்ஸ் நாட்டில் போராட்டம் நடைபெற்று வருகிறது. 17 வயது இளைஞர் ஒருவர் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நாண்டர் புற நகரில் உள்ள ஒரு பகுதியில் விதியை மீறி செயல்பட்டதாக இளைஞர் நீல் (17வயது) என்பவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயமடைந்த சிறுவன் உயிரிழந்தார், இதனால் மக்கள் கோபமடைந்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதுகுறித்து பிரான்ஸ் நாட்டு உள்துறை அமைச்சர், மக்களின் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளதால், பள்ளிகள், போலீஸ் ஸ்டேசன் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இத்தாக்குதலில் நூற்றுக்கணக்கான காவல் அதிகாரிகள் காயமடைந்துள்ளதாகவும், 1000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் வன்முறையைக் கட்டுப்படுத்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிறது. இச்சம்பவம் பிரான்ஸ் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.