புதுவை பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

Filed under: புதுச்சேரி |

புதுவை மாநில பள்ளிக்கல்வித்துறை பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டுள்ளதை அடுத்து 9 சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு வேலை நாள் என அறிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் கோடை விடுமுறை முடிந்து வெயில் கடுமையாக தொடர்ந்து இருந்ததால் பள்ளிகள் திறக்கும் தேதி ஒத்திவைக்கப்பட்டது. கடும் வெயிலால் புதுவையில் பள்ளிகள் திறக்கும் தேதி ஒதுவைக்கப்பட்டதால் அதனை ஈடு செய்ய ஜூன் 24ம் தேதியில் இருந்து அக்டோபர் 10ம் தேதி வரை 9 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.