மதுபான கொள்கை முறைகேடு; அரவிந்த் கெஜ்ரிவால் கைதா?

Filed under: அரசியல்,இந்தியா |

டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐ முன் ஆஜராகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏற்கனவே டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முறைகேடு நடந்துள்ளதாக டில்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் ஆஜராக வேண்டும் என டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதால், இன்று அவர் ஆஜராகவுள்ளார். சிபிஐ முன் இன்று ஆஜராக உள்ள நிலையில் டில்லி முதலமைச்சர் காணொளி மூலம் பேசியுள்ளார். அந்த காணொளியில் சிபிஐ மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பு என்றும் அவர்கள் நினைத்தால் யாரையும் சிறைக்கு அனுப்ப முடியும் என்றும் என்னை கைது செய்ய பாஜக கூறினால் சிபிஐ அதையும் செய்யும் என்றும் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.