மத்திய அரசு அறிவிப்பு!

Filed under: அரசியல்,இந்தியா |

புதிதாக டில்லியில் கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட உள்ளது. அதை சிறப்பிக்கும் வகையில் ரூ.75 நாணயம் வெளியிடப்படுவதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டிடம் டில்லியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. வரும் மே 28ம் தேதியன்று பிரதமர் மோடி இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கவுள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பை சிறப்பிக்கும் விதமாக ரூ.75 நாணயத்தை வெளியிடுவதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நாணயத்தின் ஒரு புறம் அசோக சின்னமும், அதன் கீழ் 75 என்ற எண்ணும் இடம்பெறும். இடதுபுறத்தில் பாரத் என்ற வார்த்தை தேவநாகரியிலும், வலதுபுறம் இந்தியா என்ற வார்த்தை ஆங்கிலத்திலும் இடம்பெறும். மற்றொரு பக்கம் புதிய நாடாளுமன்றத்தின் படம் அச்சிடப்பட்டிருக்கும். குறைந்த அளவிலேயே இந்த நாணயங்கள் அச்சிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.