மலர் கண்காட்சியில் லட்சக்கணக்கில் வசூல்!

Filed under: தமிழகம் |

ரூ.20 லட்சம் நுழைவு கட்டணம் சேலம் ஏற்காடு மலர் கண்காட்சியில் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டள்ளது.

கொடைக்கானலும் உதகையும் ஏற்காடும் தமிழ்நாட்டின் முக்கியமான கோடைக்கால சுற்றுலா தளங்களில் ஒன்று. தற்போது கோடைக்கால சீசன் தொடங்கி களைகட்டத் தொடங்கியுள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கொடைக்கானல், ஏற்காடு, உதகையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். ஏற்காட்டில் நடைபெறும் மலர் கண்காட்சியை கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது. ஏற்காடு கோடைவிழா மே 25 தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை நடக்கிறது. உற்சாகமாக நடைபெற்று வரும் கோடை விழாவை காண சேலம் மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். 5 லட்சம் மலர்களை கொண்டு மலர் கண்காட்சி, காய்கறி கண்காட்சி, மாம்பழக் கண்காட்சி போன்றவை சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளது.
சேலம் ஏற்காட்டில் மலர் கண்காட்சியில் ரூ.20 லட்சம் நுழைவு கட்டணமாக வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 6 நாட்களில் மலர் கண்காட்சியை 72,387 பேர் பார்த்துள்ளனர்.