மாணவியை பழிவாங்க நடந்த பகீர் சம்பவம்!

Filed under: இந்தியா |

கல்லூர் மாணவி ஒருவர் பெண் ஒருவரின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து பரப்பியுள்ள சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

டில்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மர்ம நபர்கள் சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும், புதிய எண்களில் இருந்து ஆபாச எஸ்எம்எஸ் செய்தி அனுப்புவதாகவும் காவல்துறையில் புகாரளித்துள்ளார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் படங்கள் வெளியிடப்பட்ட ஐபி அட்ரஸை வைத்து குற்றவாளியை தேடினர். அதில் கல்லூரி படிக்கும் இளம்பெண் ஒருவர்தான் இதை செய்தார் என்பது தெரிய வந்துள்ளது. உடனடியாக அப்பெண்ணை கைது செய்து போலீசார் விசாரித்ததில் அதிர்ச்சிக்குரிய தகவல்கள் தெரிய வந்துள்ளது. கல்லூரி மாணவியின் புகைப்படத்தை ஆபாசமான உடல்களுடன் மார்பிங் செய்து முன்னதாக இளைஞர் ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த இளைஞரை பழிவாங்க துடித்த கல்லூரி மாணவி, இளைஞரின் சகோதரியான அந்த இளம்பெண்ணின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் எடுத்து மார்பிங் செய்து பரப்பியுள்ளார். இளைஞர் ஒருவர் செய்த தவறுக்காக அவரது சகோதரியின் மார்பிங் படங்களை மற்றொரு பெண்ணே பகிர்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.