மின்சார சட்டத்திருத்த மசோதா தாக்கல்!

Filed under: இந்தியா |

மின்சார சட்டத் திருத்த மசோதா கடும் எதிர்ப்புகளுக்கிடையே மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மின்சார சட்டத் திருத்த மசோதாவுக்கு தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் மக்களவையில் மின்சாரத்துறை அமைச்சர் ஆர்கே சிங் இன்று இந்த மசோதாவை தாக்கல் செய்தார். காங்கிரஸ், திமுக உட்பட அரசியல் கட்சிகள் அறிமுக நிலையிலேயே இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டால் மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக மின்சார விநியோகத்தை தனியாருக்கு விடுவது மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க சட்ட திருத்தம் செய்வது ஆகியவை எதிர்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக உள்ளது. கடும் எதிர்ப்புகளையும் மீறி மின்சார சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.