மீண்டும் இணையும் விக்ரம் – ஐஸ்வர்யா ராய்?

Filed under: சினிமா |

“பொன்னியின் செல்வன்” திரைப்படம் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியானது.

இத்திரைப்படம் சுமார் 500 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்து தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படமானது. படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியானது. முதல் பாகம் அளவுக்கு வரவேற்பு இல்லையென்றாலும், இந்த படத்துக்கும் சுமாரான வரவேற்புக் கிடைத்துள்ளது. இந்நிலையில் மணிரத்னம் அடுத்து கமல்ஹாசனை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். அந்த படத்தை முடித்ததும், விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராயை வைத்து ஒரு காதல் படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இவர்கள் இருவரும் “ராவணன்” மற்றும் “பொன்னியின் செல்வன்” ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். ஆனால் அந்த இரண்டு படங்களிலும் இருவரின் காதலும் சேராமல் பிரித்து விடுவார் இயக்குனர் மணிரத்னம். அதனால் மூன்றாவது படத்திலாவது இணைவார்களா என்ற கேள்வி ரசிகர்களின் மத்தியில் எழுந்துள்ளது.