முதல்முறை 18 மாத குழந்தை உடல் உறுப்புகள் தானம்!

Filed under: இந்தியா,தமிழகம் |

பிறந்து 18 மாதங்களே ஆன மூளைச்சாவு அடைந்த குழந்தையின் உடல் உறுப்புகள் இரண்டு பேருக்கு பொருத்தப்பட்டதால் அவர்கள் உயிர் பிழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்துள்ளது. இதன் காரணமாக குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து குழந்தை கோமா நிலைக்குச் சென்றது. அந்த குழந்தை மூளைச்சாவு அடைந்ததாக கூறப்பட்டதையடுத்து பெற்றோரின் அனுமதியுடன் அந்த குழந்தையின் கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகங்கள் தானமாக பெறப்பட்டன. மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நான்கு மாத பெண் குழந்தைக்கு கல்லீரலும் வேலூரில் சிகிச்சை பெற்று வரும் 19 வயது பெண்ணுக்கு சிறுநீரகங்களும் பொருத்தப்பட்டன. தமிழ்நாட்டில் முதல் முறையாக 18 மாத குழந்தையிடமிருந்து உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு அதன் காரணமாக இரண்டு பேர் உயிர் பிழைத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.