யூடியூப் சேனல்கள் மீது ஐஸ்வர்யா மகள் வழக்கு!

Filed under: சினிமா |

நடிகை ஐஸ்வர்யாவின் மகள் யூடியூப் சேனல்கள் மீது வழக்கு தொடர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


டில்லி நீதிமன்றத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா தனது உடல்நிலை குறித்து தவறான தகவலை ஒரு சில யூடியூப் சேனல்கள் தெரிவித்து வருவதாக வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா டில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “எனது உடல் நலம் குறித்து உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மைக்கு மாறான வீடியோக்களை யூடியூபிலிருந்து நீக்க வேண்டும்” என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார். ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா தாக்கல் செய்த இந்த வழக்கு இன்று டில்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.