ரஹ்மான் பாடலை பாடிய இசையமைப்பாளர்கள்!

Filed under: சினிமா |

சந்தோஷ் நாராயணன் மற்றும் யுவன்சங்கர் ராஜா ஆகியோர் “பொன்னியின் செல்வன்” டிரெயிலர் வெளியீட்டு விழா மேடையில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடலை பாடியுள்ளனர்.

இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான “பொன்னியின் செல்வன்” திரைப்படம் எழுத்தாளர் கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை கதை. இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய பட்டாளமே நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது. இதையடுத்து நேற்று ஆடியோ மற்றும் டிரையிலர் வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் பல தமிழ் சினிமா பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழா மேடையில் ரஹ்மான் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவான பாடல்கள் இசைக்கப்பட்டன. விழாவுக்கு வருகை தந்திருந்த இசையமைப்பாளர்கள் சந்தோஷ் நாராயணன் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவரும் ரஹ்மானின் “அரபிக் கடலோரம்” பாடலை இணைந்து பாடி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றனர்.