ராகுல்காந்தி அக்னிபாத் பற்றி கருத்து!

Filed under: அரசியல் |

ராகுல் காந்தி அக்னிபாத் திட்டத்தின் பாதிப்பு பெரிதானால் போர் வரக்கூடும் என்று கூறியுள்ளார். நாடு முழுவதும் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதன் பாதிப்பு போர் வந்தால் தெரியும் என தனது கருத்தை தெரிவித்துள்ளார் ராகுல்காந்தி.

4 ஆண்டுகள் குறுகிய கால பணியை அளிக்கும் அக்னிபாத் ராணுவப்பணி திட்டத்தை சமீபத்தில் அறிவித்தது மத்திய அரசு. இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல பகுதிகளில் இருக்கும் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். பல இடங்களில் போராட்டம் வன்முறையாக வெடித்து ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி “நாட்டில் வேலைவாய்ப்பு பெரும் பிரச்சினையாக மாறி வரும் நிலையில் கடைசியில் ராணுவ வேலைவாய்ப்பும் முடக்கப்பட்டுள்ளது. முப்படைகளில் பணிகளில் சேர கனவோடு பயிற்சி பெற்ற இளைஞர்களின் கனவை மத்திய அரசு உடைத்துவிட்டது. அக்னிபாத் திட்டத்தின் பாதிப்பு போர் வரும்போதுதான் தெரிய வரும். நேஷனல் ஹெரால்டு வழக்கில் தன்னை விசாரிப்பதன் மூலம் காங்கிரஸ் தலைவர்களை பீதிக்கு உள்ளாக்கலாம் என அவர்கள் நினைத்தனர். ஆனால் அது பலிக்காது என்பதை புரிந்துக் கொண்டனர்” என்று கூறியுள்ளார்.