லேப்டாப், கம்ப்யூட்டர்; முதலமைச்சர் அறிவிப்பு!

Filed under: இந்தியா |

ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி 8ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு லேப்டாப் வழங்கப் போவதாக அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான வை.யெஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆந்திர மாநிலத்தில் ஆட்சி நடத்தி வருகிறது. புதிய புதிய திட்டங்களை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்து வருகிறார். அந்த வரிசையில், 8ம் வகுப்பு மாணவியருக்கு டேப்லெட் கம்யூட்டர்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். ஒவ்வொரு டேப்லெட்டின் மதிப்பு ரூ.12 ஆயிரம் ஆகும். இவ்வாண்டு அரசுப் பள்ளிகளில் சுமார் 7 லட்சம் மாணவ, மாணவியர் புதிதாக சேர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என கூறியுள்ளார்.