வரலாற்றுச் சாதனை படைத்த நந்தினி!

Filed under: தமிழகம் |

தமிழ் உள்ளிட்ட அனைத்து பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்று வரலாற்றுச் சானையை படைத்துள்ளார் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த மாணவி நந்தினி.

இன்று காலை 12ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது. திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவி நந்தினி பிளஸ் 2 பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களிலும் நூற்றுக்கு நூறு பாதிப்பெண் பெற்றுள்ளார். தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், காமர்ஸ், அக்கவுண்டன்சி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என அனைத்து பாடங்களிலும் 100 மதிப்பெண் பெற்ற அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இவர் கூலி தொழிலாளியின் மகள். இதுபற்றி நந்தினி கூறுகையில், “படிப்பை தனது வரலாற்று சாதனையாக நினைத்ததால் தான் இது சாத்தியம் ஆயிற்று. தனக்கு இந்த அளவுக்கு மதிப்பெண் கிடைக்க தனது பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கொடுத்த ஒத்துழைப்புதான் காரணம். சிஏ படிக்க ஆசைப்படுகிறேன், சார்ட்டட் அக்கவுண்டண்ட்டாக வேண்டும் என்பதுதான் எனது கனவு” என்று கூறியுள்ளார்.