சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்துள்ளது.
![](https://netrikkan.com/wp-content/uploads/2020/09/madras-university-1-1.jpg)
கொரோனா வைரஸ் காரணத்தினால் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் எனவும் மற்றும் மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுகிறது எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தற்போது சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; சென்னை பல்கலைகழகம் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் வரும் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தத் தேர்வுகளின் முடிவுகள் அக்டோபர் 14-ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் அவர்களுக்கு இயற்கை வள பாதுகாப்பு சங்கம் கோரிக்கை.
நாகை மாவட்டத்தில் நான்கு மருத்துவர்கள், ஒரு செவிலியருக்கு கொரோனா உறுதி - அச்சத்தில் மருத்துவமனை ஊழிய...
உதயநிதியை தடுத்தி நிறுத்திய மத்திய பாதுகாப்பு படை!
கோவையில் மதிய உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகள் மயக்கம்!