விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்காக படத்திற்கு பிரேக்?

Filed under: அரசியல்,சினிமா |

சென்னையில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் நடிகர் விஜய் நடிக்கும் “லியோ” திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது.

படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். திரிஷா கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அக்டோபர் 19ம் தேதி ரிலீசாகவுள்ளது. “லியோ” படத்தில் 2 ஆயிரம் டான்ஸர்கள் பங்கேற்று ஆடிய பிரமாண்ட பாடல் காட்சி சமீபத்தில் நிறைவடைந்துள்ளதாகவும், இப்பாடல் காட்சி 11ம் தேதியுடன், சஞ்சத் தத் தன் பாடிகார்டுகளுடன் நடந்து வருவதுடன், அப்போது, அர்ஜூன், விஜய், மடோனா செபஸ்டியன், மன்சூர் அலிகான் ஆகியோர் வரும் காட்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும். இப்பாடல் காட்சி ஷூட்டிங் முடிந்த உடன், 2 நாட்கள் பிரேக் விடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, பிளஸ்2 தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுக்க இந்த இடைப்பட்ட நாட்களை விஜய் பயன்படுத்திக் கொள்ளவுள்ளதாக தெரிகிறது. விஜய் அரசியல் பிரவேசத்திற்கான அறிகுறியாகத்தான் இதை செயல்படுத்த உள்ளதாகவும், இதற்கான வேலைகளை புஸ்ஸி ஆனந்த் தயார் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.