விரைவில் “கலைஞர் உணவகம்!”

Filed under: அரசியல்,தமிழகம் |

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி விரைவில் தமிழகத்தில் ‘கலைஞர் உணவகம்‘ திறக்கப்படும்: என்று கூறியுள்ளார்.

கடந்த ஜெயலலிதா ஆட்சியில் தமிழ்நாட்டில் அம்மா உணவகம் திறக்கப்பட்டது. ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இவ்வுணவகம் வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. அம்மா உணவகங்கள் ஒரு சில இடங்களில் மூடப்பட்டு வருவதாகவும் ஒரு சில இடங்களில் சரியாக செயல்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பேரூராட்சி பகுதிகளில் விரைவில் கலைஞர் உணவகம் திறக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இன்று டில்லியில் அவர் செய்தியாளர்களிடம், “திமுக தனது அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றும். அவ்வகையில் விரைவில் கலைஞர் உணவகம் திறக்கப்படும்“ என்று தெரிவித்தார். அவரது இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.