ஷாக் கொடுக்கின்ற ஓபிஎஸ்!

Filed under: அரசியல் |

சென்னை மண்டல ஆர்பிஐ இயக்குநருக்கு அதிமுகவின் 7 வங்கி கணக்குகளை முடக்குமாரு ஓபிஎஸ் கடிதம் எழுதி உள்ளார்.

ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இரு பிரிவுகளுக்கிடையே ஏற்பட்ட பிரச்னையில் நிலையில் தற்போது ஈபிஎஸ் கை ஓங்கியுள்ளது. இடைக்கால பொதுச்செயலாளர், எதிர்க்கட்சி தலைவர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என அனைத்து முக்கிய பதவிகளும் ஈபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு இடமுள்ளது. இதைத்தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் அதிமுக மாவட்ட செயலாளர்களாக இருந்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் மாற்ற ஈபிஎஸ் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
ஓபிஎஸ் தனது தரப்பில் இருந்து ஈபிஎஸ் தரப்பினருக்கு அதிர்ச்சி தரும் விதமாக அதிமுக-வின் 7 வங்கி கணக்குகளை முடக்க கோரி சென்னை மண்டல ஆர்பிஐ இயக்குநருக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். கரூர் வைஸ்யா, எஸ்பிஐ, இந்தியன் வங்கி உள்ளிட்ட 7 கணக்கு பணப்பரிவர்த்தனை நிறுத்த ஓபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளார்.